நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர், வன பாதுகாப்பு, வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, மாத்தளை(Matale), கண்டி(Kandy) மற்றும் நுவரெலியா(Nuwara eliya) மாவட்டங்களில் அமைந்துள்ள பல இயற்கை காடுகளில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாத்தளை மாவட்டத்தின் எல்லையில் உள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் சில பகுதிகள், ஹந்தன மலைத்தொடர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஹோட்டன்தன்ன ஆகியவை அதிக ஆபத்துள்ள நிலையில் உள்ளன.
காட்டுத் தீ
கடந்த சில நாட்களாக பல ஒதுக்கப்பட்ட காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறையினர், வன பாதுகாப்பு, வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்