மனதை உருக்கும் கதைகள்: கதிகலங்க வைத்த விபத்து - மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவன் பலி
புதிய இணைப்பு
லண்டனில் (London) இறந்த தனது மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த கணவன் அர்ஜூன் நேற்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 26ஆம் திகதி இவரது பாரதிபென் உயிரிழந்துள்ளார். தனது அஸ்தி சொந்த கிராமத்தில் கரைக்கப்பட வேண்டுமென்பது பாரதி பென்னின் கடைசி ஆசையாக இருந்துள்ளது.
அர்ஜூன் பட்டோலியா, மனைவியின் அஸ்தியை எடுத்துக்கொண்டு அம்ரேலியிலுள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார். சடங்குகளை முடித்தபின் மீண்டும் லண்டன் திரும்புவதற்காக அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவர், ஏர் இந்தியா AI-171 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் பிற்பகல் 1:40 மணியளவில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாக விபத்திற்குள்ளானது. இத்தம்பதிக்கு நான்கு மற்றும் எட்டு வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
முதலாம் இணைப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணியளவில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில் சுமார் 240க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த விமானத்தில் பயணித்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
11 ஏ இருக்கையில் இருந்த அவர் அவசர வெளியேற்ற கதவை பயன்படுத்தி வெளியேற முயற்சித்து காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
Ramesh Viswashkumar, The sole survivor of the Air India crash escaped by jumping from the plane. He was on seat number 11A. #AirIndia #AhmedabadNews #Gujarat #PlaneCrash #ITReel pic.twitter.com/NsMBeZOkbX
— IndiaToday (@IndiaToday) June 12, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
