யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி! ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு!
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை யாழ்ப்பாணத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் முன்வைத்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம் பெற்ற நிலையில் அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
முறையற்ற இடமாற்றங்கள்
அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டி இடைக்கால தடையையும் விதித்தது.

அதன் பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதாக ஆணைகுழுக்கு வழங்கிய உறுதிப்பாட்டினை அடுத்து இடைக்கால தடை நீக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகிறது.
அவ்வாறான நிலையில் தற்போது மேன்முறையீட்டை பரிசீலிக்கிறோம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவது ஏற்க முடியாது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |