பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவினால் பாராட்டுச் சான்றிதழ் (படங்கள்)
உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முகமாக அதிபர் ரணில் விக்ரமசிங்கினால் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12) அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குத் தெரிவான 60 மாணவர்களும், 2021 கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் தேசிய மட்டத்தில் முதல் 05 இடங்களைப் பிடித்த 30 மாணவர்கள் உட்பட மொத்தம் 90 மாணவர்களும் அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.
அதிபரின் அவதானம்
06 உயர்தரப் பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு தலா 50,000 ரூபா பணப் பரிசுகளும், ஏனைய இடங்களுக்கு தலா 25,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது.

அத்தோடு மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்துகளையும் செவிமடுத்த அதிபர் அவை தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.

