வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
Sri Lankan Peoples
Sri Lanka Government
Aswasuma
By Dilakshan
அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி மாத கொடுப்பனவு நாளை (13)அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
குறித்த அறிவிப்பானது, நலன்புரி நன்மைகள் சபையினால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1,725,795 குடும்பங்களுக்கான பெப்ரவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை வரவு வைக்கப்படவுள்ளது.
கொடுப்பனவு
இதேவேளை, குறித்த குடும்பங்களுக்காக ரூ.12,555,651,250 (12 பில்லியன்) விடுவிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து கொடுப்பனவு தொகையைப் பெற முடியும் என்று சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்