சைப்ரஸில் பிரித்தானிய தளத்தில் ட்ரோன் தாக்குதல்!
சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் அக்ரோதிரி விமானப்படை தளம் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அந்நாட்டில் அதிகரித்துள்ளது.
குறித்த தாக்குதல் நேற்று(01.03.2026) இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரி தளத்தில் வெடிப்பு ஏற்பட்டதைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஈரானின் தாக்குதல்
இந்த குண்டுவெடிப்புகள் ஈரானின் தாக்குதல்களுடன் தொடர்புடையதா என்பது தெரியாததால், அதிகாரிகள் இன்னும் தாக்குதல்களை உறுதிப்படுத்தவில்லை.

அலி கமேனியின் கொலைக்குப் பிறகு மத்திய கிழக்கின் பல பகுதிகளில் இஸ்லாமிய குடியரசு தாக்குதல்களைத் தொடர்கிறது.
சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு (22:00 GMT) நடந்த தாக்குதலுக்கு ஆயுதப்படைகள் பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளை குறிவைத்து, பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் நட்பு நாடுகளின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பிரித்தானிய துருப்புக்களும் பொதுமக்களும் ஆபத்தில் உள்ளனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த ஒரு தனி சம்பவத்தில், சைப்ரஸை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹீலி மேலும் கூறியுள்ளார்.
சைப்ரஸ் ஜனாதிபதி
சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸுடனான தொலைபேசி அழைப்பின் போது, "சைப்ரஸ் ஒரு இலக்கு அல்ல என்பதை சர் கெய்ர் தெளிவாக உறுதிப்படுத்தியதாக" சைப்ரஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, கட்டாரில் இருந்து இயங்கும் RAF டைபூன் விமானம், "தற்காப்பு வான் கண்காணிப்புபணியில்" ஈடுபட்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஒரு பிரித்தபனிய போர் விமானம் ஈரானிய ஆளில்லா விமானத்தை வீழ்த்தியது இதுவே முதல் முறை.
முன்னதாக, ஈராக்கில் உள்ள ஒரு பிரித்தானிய எதிர்-ட்ரோன் பிரிவு, சேவைப் பணியாளர்களைக் கொண்ட கூட்டணி தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது.
இருப்பினும், ஈராக்கின் தவறுகளில் இருந்து பிரித்தானியா பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், ஈரான் மீதான ஆரம்ப தாக்குதல்களில் அது ஈடுபடவில்லை என்றும், "இப்போது தாக்குதல் நடவடிக்கையில் சேராது" என்றும் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளமையும் குறிப்படத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |