அசாத் மௌலானா மற்றுமொரு சஹ்ரான்:ஒப்பிடும் முஸ்லிம் அரசியல்வாதி
Parliament of Sri Lanka
Muhammad Abdul Haleem
Easter Attack Sri Lanka
By Sumithiran
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானாவை இன்னுமொரு சஹ்ரான் என கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்னுமொரு சஹ்ரான்
அசாத் மௌலானாவை இன்னுமொரு சஹ்ரான் என்றே கூறவேண்டும்.அவர் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு மௌலானா என்ற பெயரை வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டு நான்கு வருடங்களின் பின்னர் தற்போது வாய் திறந்துள்ளார்.

அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம்
சனல் 4 விவாகரத்தின் பின்னர் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குழப்பமடைந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு விடயத்தை கூறுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.