மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிர்மாய்க்க முற்பட்ட 24 வயது இளைஞர் வைத்தியசாலையில்!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முற்பட்ட இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (07-07-2026) இடம்பெற்றுள்ளது. மட்டு தலைமையக காவல்துறையினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 12 மணியளவில் குறித்த இளைஞன் தனது கழுத்தை பிளோற்றினால் அறுத்து உயிர்மாக்க முயற்சித்த போது படுகாயமடைந்துள்ளார்.

இதன்பின்பு அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |