தமிழர் பகுதியில் காட்டுக்குள் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்...! தாயை வலை விரித்து தேடும் காவல்துறை
மட்டக்களப்பு (Batticaloa) சந்திவெளி காட்டு பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலமானது மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலையில் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை சம்பவ தினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மூறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்