செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் முற்றிய முரண்பாடு
செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அபிவருத்தி குழுவின் தலைவர் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு வாக்குவாதத்தால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14) செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், கூட்டத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவை உள்ளே செல்லவிடாது செட்டிகுளம் பிரதேசசபையிர் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கருப்பு உடை
செட்டிகுளம் பிரதேச சபையின் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச சபை தலைவர் உட்பட அவர் கட்சி சாராத இருவரை கூட்டத்துக்கு கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வட்டார உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற ரீதியில் அனைத்து சபை உறுப்பினர்களையும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து செட்டிகுளம் பிரதேச ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பிரதேச செயலக வாயிலில் கூடியிருந்தனர்.
இதன்போது வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், காதர் மஸ்தான் மற்றும் முத்து முகமது ஆகியோரை அனுமதித்த பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களோடு பிரதேசசபை வளாகத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
கூட்டத்தில் அனுமதி
இதையடுத்து, அங்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் வாகனத்தினை பிரதேச செயலகத்திற்குள் நுழைய விடாது சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் போது தங்களையும் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தலைவர், “ இது அரசியல் செயற்பாடு அல்ல, நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை.
ஆகவே இந்த விடயம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே செயல்படுத்தப்பட வேண்டும்.
அபிவிருத்தி குழு
ஆகவே இங்கே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கதைத்து இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும் இல்லையேல் நீதிமன்றத்தை நாட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பிரதேச சபை உறுப்பினர்கள் மீண்டும் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது கூட்ட ஆரம்பத்தில் தலைமை உரையாற்றிய பிரதி அமைச்சர், “அபிவிருத்தி குழு தலைவர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்றத்தில் இவ்வாறான ஒரு நடைமுறை கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்பட்டு இருந்த போதிலும் கூட எமது பிரதேசத்தின் செயல்பாடு கருதி நாம் இந்த கூட்டத்தில் அனைவரையும் அனுமதித்து சுமூகமான முறையில் கூட்டத்தைக் கொண்டு செல்வோம்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு முடிவு எடுப்போம்” என தெரிவித்து கூட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
