வவுனியாவில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை! பரிசோதனையில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை தெரியவந்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையியேயே அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் நேற்று(02) இரவு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா மரணம்
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்ரியன் பரிசோதனையில் கொவிட் தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மேலும், அண்மையில் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கம்பஹா பிரதேசத்தை சேரந்த ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening