மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Central Bank of Sri Lanka CID - Sri Lanka Police Law and Order
By Sathangani Jun 12, 2025 10:51 AM GMT
Report

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட கணக்கியல் அறிக்கைகளை இதுவரையில் சமர்ப்பிக்கத் தவறியது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக டிசம்பர் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கோர விபத்து - தீப்பற்றி எரியும் பிரித்தானியா புறப்பட்ட பயணிகள் விமானம் : நூற்றுக்கணக்கானோர் பலி

கோர விபத்து - தீப்பற்றி எரியும் பிரித்தானியா புறப்பட்ட பயணிகள் விமானம் : நூற்றுக்கணக்கானோர் பலி

நீதிமன்றத்தில் முன்னிலை

அப்போது, ​​சம்பவம் தொடர்பாக பிணையில் விடுவிக்கப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் (Arjun Aloysius) உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Court Order To Cbsl Financial Intelligence Unit

சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த வழக்கு இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அன்றைய தினம் இந்த சந்தேக நபர்களின் நிறுவனங்கள் தொடர்பான கணக்கியல் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், அந்த அறிக்கைகள் இன்றுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வழக்குத் தொடர வாதிகளுக்கு விருப்பமில்லை என்றால் இந்த வழக்கு தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு நீதவானிடம் கோரினார்.

விரைவில் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

விரைவில் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

சந்தேக நபராக பெயரிடப்பட்டோர்

இந்தக் குற்றம் தொடர்பாக சட்டமா அதிபர் ஏற்கனவே தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Court Order To Cbsl Financial Intelligence Unit

முந்தைய நீதிமன்றம் தொடர்புடைய அறிக்கைகளை சமர்ப்பிக்க பிறப்பித்த உத்தரவு குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான், அடுத்த திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் (Arjuna Mahendran) உள்ளிட்ட ஏழு பேர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம்

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024