மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீட்டு வாய்ப்பு! வெளியாகியுள்ள அறிவிப்பு
மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) உள்ள வளங்களைப் பயன்படுத்துவதற்கான முதலீடுகளைக் கோரும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதற்கான கால அவகாசம் ஜூலை 9 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை (BOI) அறிவித்துள்ளது.
கூடுதல் அவகாசம்
ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு விரிவான முன்மொழிவுகளைத் தயாரித்துச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு இந்த நீட்டிப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, ஆவணங்கள் வழங்கப்படும் இறுதி நேரம், ஜூலை 8, பிற்பகல் 2:30 மணியாகவும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நேரம் ஜூலை 9, பிற்பகல் 2:00 மணியாகவும் மாற்றப்பட்டுள்ளது.
முன்மொழிவுகள்
அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல விமான நிலைய முதலீட்டு வாய்ப்பு, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் (AASL) சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

இத்திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் இறுதித் திகதியில் இருந்து 120 நாட்களுக்கு (நவம்பர் 5 வரை) செல்லுபடியாகும்.
இதேவேளை, அதற்கான முன்மொழிவு உத்தரவாதங்கள் (Proposal guarantees) 150 நாட்களுக்கு (டிசம்பர் 5 வரை) செல்லுபடியாக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |