யாழ். நெல்லியடியில் விபத்து! குடும்பஸ்தர் பலி
accident
jaffna
death
By Vanan
யாழ். நெல்லியடி வதிரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்ததால், ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி