கோட்டாபயவே மூலக்காரணம்! நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த தேசபந்து

Colombo Law and Order Deshabandu Tennakoon
By Dharu Jul 30, 2025 07:34 AM GMT
Report

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நிலுவையில் உள்ள பிணை மனு மீதான உத்தரவை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று(29) இடம்பெற்ற நிலையில் அவர் இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் சிறிலங்கா அதிபர், கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து தான் செயல்பட்டதாகவும், தனது சொந்த விருப்பப்படி எதையும் செய்யவில்லை என்றும் தேசபந்து வாதிட்டுள்ளார்.

ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! NHK விசேட வேர்ல்ட் அறிக்கை

ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! NHK விசேட வேர்ல்ட் அறிக்கை

தேசபந்து தென்னகோன்

போராட்டத்தின் போது அதிபர் செயலகத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்ய திட்டம் இருப்பதாகக் கூறி,  தேசபந்து தென்னகோன் இந்த முன் பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் சட்டத்தரணி தரிந்து விக்ரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில், மூத்த சட்டத்தரணி அஜித் பத்திரண, தென்னகோன் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கோட்டாபயவே மூலக்காரணம்! நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த தேசபந்து | Deshabandu Accuses Gotabaya

உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதன்படி தேசபந்து தென்னகோன் தனது பிணை மனுவில், சம்பவத்தைத் தடுக்க எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த துணை காவல் கண்காணிப்பாளராக, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உரிய உத்தரவுகளை வழங்குவதன் மூலம் தனது அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்து - 100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி: நால்வர் படுகாயம்

கோர விபத்து - 100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி: நால்வர் படுகாயம்

குற்றப் புலனாய்வுத் துறை

இருப்பினும், அப்போதைய காவல் கண்காணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளரின் உத்தரவுகள் காரணமாக தனது கடமைகளைச் சரியாகச் செய்வதிலிருந்து தனக்குத் தடை ஏற்பட்டதாகவும், நிறைவேற்று ஜனாதிபதியிடமிருந்து தெளிவுபடுத்தலைப் பெற்ற பிறகு, அவரின்  உத்தரவுகளின்படி அதிகாரிகளை அனுப்பி கலவரக்காரர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்ததாகவும்தென்னகோன் தனது விண்ணப்பத்தில் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவே மூலக்காரணம்! நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த தேசபந்து | Deshabandu Accuses Gotabaya

இதன்படி குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட சிறப்பு காவல் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிக்கை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய ஓகஸ்ட் 05 ஆம் திகதி பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவை நீதிபதி அறிவித்துள்ளார்.

மேலும், நிலுவையில் உள்ள பிணை விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி கூறியுள்ளார்.

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016