இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி

Sri Lankan Tamils Jaffna
By Vanan Nov 26, 2023 04:25 PM GMT
Report

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

நாளைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்ட அழைப்புக் கட்டளை தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை எவ்வாறாயினும் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பலதரப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து வழக்குகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

தொடர்ச்சியாக வழக்குகள்

பல நீதிமன்றங்களில் இருந்து தீர்ப்புகள் வந்த பின்னும் ஒவ்வொரு காவல்துறை பிரிவுகளிலும் வழக்குகள் தொடர்ச்சியாக செயற்பாட்டாளர்கள் மீதும் விதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி | Don T Have Right To Remember For Tamils

நாளைய தினம் மாவீரர் நினைவு நாள். அந்த நாளிலும் காலையில் கூட எனது கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் தீவிர செயற்பாட்டாளருமான ஆண்டி ஐயா விஜயராச மற்றும் மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் பவானந்த சர்மா இவ்வாறு காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது ஊர்காவற்றை நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்டதல்ல. காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட அழைப்பாகக் காணப்படுகின்றது.

இது தொடர்பாக நான் அதிபர் சட்டத்தரணி தவராசாவுடன் கலந்துரையாடினேன். எவ்வாறாக இருப்பினும் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கே மிக முக்கியமான விடயம் காலங்காலமாக இந்தக் காவல்துறை தமிழர்களுடைய நினைவு கூறுகின்ற உரிமைக்கு எதிராக வழக்கினை பதிவு செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தினை நாடுவது காவல்துறையினுடைய வழமையான செயற்பாடாக இருந்து வருகிறது.

காலையிலே இவர்கள் நீதிமன்றம் சென்று வந்த பின்னரே மாவீரர் தின நினைவேந்தலை காரைநகரில் முன்னெடுக்க முடியுமா இல்லையா என்பது தெரியவரும். இவ்வாறாக இவர்களுடைய நேரம் காலத்தினை காவல்துறையினர் நாளை நீதிமன்றத்தில் செலவழிக்க வைத்துள்ளார்கள்.

இங்கு யாரும் எவரும் ஆயுதம் ஏந்தியவர்களுக்காக நினைவேந்தல் செய்வதாக சொல்லவில்லை. அவர்கள் மாவீரர்கள். அவர்கள் இறந்த பின்னர் உறவுகளினால் அஞ்சலிக்கப்படுகின்றார்கள்.

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

நினைவேந்தலுக்கான எதிர்ப்பு

உலகத்தின் எந்த ஒரு இனமாக இருந்தாலும் இறந்தவரை நினைவு கூறுவது வழமையான வடிவமாக இருக்கின்றது. ஆகவே இவ்வாறனவர்களினுடைய பெற்றோர்கள் நினைவேந்தலை மேற்கொள்ள முடியாது என்றால் இது எந்த நாட்டில் நடக்கின்றது.

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி | Don T Have Right To Remember For Tamils

காவல்துறையாக இருக்கட்டும் அல்லது அதிபராக இருக்கலாம் அல்லது இந்நினைவேந்தலுக்கு எதிராக கதைத்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். இதே இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதனை சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டினுடைய பெரும்பான்மை இனமாக இருக்கக்கூடிய சிங்கள இனம் நியாயத்தை முதலில் கேட்க வேண்டும்.

நாங்கள் அதிகாரப் பகிர்வு பற்றி கதைக்கின்றோம். இந்த அதிகாரப் பகிர்விற்காக தான் போராடினோம். அடிப்படையில் நியாயமான முறையில் தான் நாம் ஒவ்வொன்றினையும் கேட்டோம். கேட்டவர்கள் திட்டமிட்டு மௌனிக்கப்பட்டார்கள். இப்பொழுது இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமையை கூட தடை செய்கின்றார்கள்.

இங்கே அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் பேசும் காவலர்கள் இங்கே இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த உணர்வு புரிந்து இருக்கும். உணர்வுகள் புரியாமல் இருக்கின்ற ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினுடைய உணர்வுகளை சிதறடிக்கின்றார்கள் - மழுங்கடிக்கின்றார்கள். யாராலும் இதனை மன்னிக்க முடியாது என்றார்.

திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024