இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி

Sri Lankan Tamils Jaffna
By Vanan Nov 26, 2023 04:25 PM GMT
Report

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

நாளைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்ட அழைப்புக் கட்டளை தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை எவ்வாறாயினும் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பலதரப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து வழக்குகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

தொடர்ச்சியாக வழக்குகள்

பல நீதிமன்றங்களில் இருந்து தீர்ப்புகள் வந்த பின்னும் ஒவ்வொரு காவல்துறை பிரிவுகளிலும் வழக்குகள் தொடர்ச்சியாக செயற்பாட்டாளர்கள் மீதும் விதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி | Don T Have Right To Remember For Tamils

நாளைய தினம் மாவீரர் நினைவு நாள். அந்த நாளிலும் காலையில் கூட எனது கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் தீவிர செயற்பாட்டாளருமான ஆண்டி ஐயா விஜயராச மற்றும் மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் பவானந்த சர்மா இவ்வாறு காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது ஊர்காவற்றை நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்டதல்ல. காவல்துறையினரால் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட அழைப்பாகக் காணப்படுகின்றது.

இது தொடர்பாக நான் அதிபர் சட்டத்தரணி தவராசாவுடன் கலந்துரையாடினேன். எவ்வாறாக இருப்பினும் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கே மிக முக்கியமான விடயம் காலங்காலமாக இந்தக் காவல்துறை தமிழர்களுடைய நினைவு கூறுகின்ற உரிமைக்கு எதிராக வழக்கினை பதிவு செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தினை நாடுவது காவல்துறையினுடைய வழமையான செயற்பாடாக இருந்து வருகிறது.

காலையிலே இவர்கள் நீதிமன்றம் சென்று வந்த பின்னரே மாவீரர் தின நினைவேந்தலை காரைநகரில் முன்னெடுக்க முடியுமா இல்லையா என்பது தெரியவரும். இவ்வாறாக இவர்களுடைய நேரம் காலத்தினை காவல்துறையினர் நாளை நீதிமன்றத்தில் செலவழிக்க வைத்துள்ளார்கள்.

இங்கு யாரும் எவரும் ஆயுதம் ஏந்தியவர்களுக்காக நினைவேந்தல் செய்வதாக சொல்லவில்லை. அவர்கள் மாவீரர்கள். அவர்கள் இறந்த பின்னர் உறவுகளினால் அஞ்சலிக்கப்படுகின்றார்கள்.

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

நினைவேந்தலுக்கான எதிர்ப்பு

உலகத்தின் எந்த ஒரு இனமாக இருந்தாலும் இறந்தவரை நினைவு கூறுவது வழமையான வடிவமாக இருக்கின்றது. ஆகவே இவ்வாறனவர்களினுடைய பெற்றோர்கள் நினைவேந்தலை மேற்கொள்ள முடியாது என்றால் இது எந்த நாட்டில் நடக்கின்றது.

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி | Don T Have Right To Remember For Tamils

காவல்துறையாக இருக்கட்டும் அல்லது அதிபராக இருக்கலாம் அல்லது இந்நினைவேந்தலுக்கு எதிராக கதைத்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். இதே இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதனை சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டினுடைய பெரும்பான்மை இனமாக இருக்கக்கூடிய சிங்கள இனம் நியாயத்தை முதலில் கேட்க வேண்டும்.

நாங்கள் அதிகாரப் பகிர்வு பற்றி கதைக்கின்றோம். இந்த அதிகாரப் பகிர்விற்காக தான் போராடினோம். அடிப்படையில் நியாயமான முறையில் தான் நாம் ஒவ்வொன்றினையும் கேட்டோம். கேட்டவர்கள் திட்டமிட்டு மௌனிக்கப்பட்டார்கள். இப்பொழுது இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமையை கூட தடை செய்கின்றார்கள்.

இங்கே அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் பேசும் காவலர்கள் இங்கே இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த உணர்வு புரிந்து இருக்கும். உணர்வுகள் புரியாமல் இருக்கின்ற ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினுடைய உணர்வுகளை சிதறடிக்கின்றார்கள் - மழுங்கடிக்கின்றார்கள். யாராலும் இதனை மன்னிக்க முடியாது என்றார்.

திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026