கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation
By Sathangani Sep 05, 2025 05:20 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இராவண எல்ல அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக பதுளை மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கை மற்றும் கால்களை இழந்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களில் 8 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

நாட்டை உலுக்கிய பாரிய விபத்து : ஒருவர் அதிரடி கைது

நாட்டை உலுக்கிய பாரிய விபத்து : ஒருவர் அதிரடி கைது

தேடும் நடவடிக்கைகள்

இன்று அதிகாலை 4.00 மணி வரை காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் இடிபாடுகளுக்கு இடையில் மேலும் உடல்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியர் கூறினார்.

கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல் | Ella Bus Accident 10 People In Critical Condition

விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை இன்னும் சரியாகச் சொல்ல முடியாது என்றும், பிற்பகலுக்குள் சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பேருந்தின் சாரதியுடன் 30 பயணிகள் இருந்ததாகவும் பேருந்தின் சாரதி உட்பட 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எல்ல பகுதியில் கோர விபத்து - வேடிக்கை பார்க்க வர வேண்டாம்: எச்சரிக்கும் காவல்துறை

எல்ல பகுதியில் கோர விபத்து - வேடிக்கை பார்க்க வர வேண்டாம்: எச்சரிக்கும் காவல்துறை

காவல்துறையினர் மேலதிக விசாரணை

காயமடைந்த 06 பெண்கள், 05 ஆண்கள், 03 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து பயணிகளை மீட்க உதவிய இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோர விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து வைத்தியர்கள் வெளியிட்ட தகவல் | Ella Bus Accident 10 People In Critical Condition

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டு, எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இரவு நேரம் ஏற்பட்ட கோர விபத்து : பத்துபேர் பலி பலர் ஆபத்தான நிலையில்

இலங்கையில் இரவு நேரம் ஏற்பட்ட கோர விபத்து : பத்துபேர் பலி பலர் ஆபத்தான நிலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023