டொனால்ட் ட்ரம்ப் கைது - செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் : எச்சரிக்கும் நிபுணர்கள்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் போலியான படங்கள் உலகெங்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்படுதல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது போன்ற போலியான படங்கள் அண்மைய நாட்களில் பரவி வருகின்றது.
உண்மையான படங்களைப் போல் காட்சியளிக்கும் குறித்த நிழற்படங்களும், காணொளிகளும் உண்மை எது - பொய் எது என வேறுபடுத்துவதில் சிக்கலை தோற்றுவிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கும் நிபுணர்கள்
உலகநாடுகள் பூசலில் உள்ள குறித்த சூழ்நிலையில் இவ்வாறான போலியான படங்கள் சமூக மட்டத்தில் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கிடைக்கும் உண்மைத் தகவல்கள் மீதான நம்பிக்கை குறைந்து, உலக செயல்பாடுகள் மீது அவநம்பிக்கை தோன்றும் நிலைக்கு இது வழிவகுக்கலாம் என நிபுணர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.