ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய பிரான்ஸ்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30,000 இந்திய மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த பிரான்ஸ் (France) திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் அரசு இந்திய (India) மாணவர்களை அதிகளவில் கல்வி பெற அழைக்கும் திட்டத்தினை வலுப்படுத்தி வருகின்றது.
இந்தநிலையில், French Embassy in India மற்றும் Campus France இணைந்து Classes Internationales என்ற இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரஞ்சு மொழி
இந்தத் திட்டம் முதன்முதலாக ஜெய்ப்பூரில் 2024 ஜனவரியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்த போது, 2030 இற்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்சுக்கு அழைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள் பிரஞ்சு மொழி பயிற்சி மற்றும் அகாதமிக் முன்னேற்பாட்டு பாடங்களை பயில்வதற்கான வாய்ப்பு பெறுகின்றார்கள்.
மாணவர்களின் கல்வி
ஆரம்ப நிலை மற்றும் முன்னேற்றமான நிலை இரண்டிற்கும் திறந்திருக்கும் இந்த திட்டம், மாணவர்களை பிரஞ்சு மொழியில் நடத்தப்படும் பட்டப்படிப்பு படிப்புகளுக்கான தகுதியுடன் உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க www.classesinternationales.org என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு நுழைவுத் தேர்வும் தேவை இல்லை ஆனால் மாணவர்களின் கல்வி முன்னணி மற்றும் ஆர்வம் அடிப்படையாகக் கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி இந்தியா-பிரான்ஸ் கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதோடு மாணவர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான வழியையும் உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
