தையிட்டி விவகாரத்தில் அரசுக்கு விலை போன வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்...! கஜேந்திரகுமார் பகிரங்கம்
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் அரசாங்கத்திற்கு விலைபோன தவிசாளர் ஒருவர் இருப்பதுதான் தையிட்டியில் இடம்பெறும் முக்கால்வாசி பிரச்சினைகளுக்குக் காரணம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “குறித்த சட்டவிரோத கட்டிடம் கட்டும் நேரத்தில் இதே தவிசாளர்தான் அப்போதும் இருந்தார்.
அந்த நேரத்தில் குறித்த விவகாரம் தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது எனவும் மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கினார்.
இதனை மக்கள் நம்பி வழக்கு தொடராமல் இருந்ததால்தான், இரண்டு வருடத்தில் அந்த கட்டிடத்தைக் கட்ட அவர்களுக்குக் கால அவகாசம் கிடைத்துள்ளது" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழர் தரப்பு அரசியல் களம், தென்னிலங்கை அரசியல் களம், தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |