தடை விலக்கிய அமெரிக்கா - ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருள்
ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருளைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஒரு மாத கால சலுகைக் காலத்தை அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்க்கான தற்காலிக பொருளாதாரத் தடை விலக்கை இனிமேல் நீட்டிக்கப் போவதில்லை என அமெரிக்கா கடந்த புதன்கிழமை (15) அறிவித்திருந்த பின்னணியில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
சலுகை விலை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போது கடுமையாக உயர்ந்த உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ஒப்பந்தங்களின் கீழ் சலுகை விலையில் ரஷ்ய எரிபொருள் மற்றும் நிலக்கரியை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர் நாட்டிற்கு கச்சா எண்ணெயை ஏற்றி வந்த முதலாவது கப்பல் (17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ‘தேஷ் மகிமா’ (Desh Mahima) என பெயரிடப்பட்ட இக்கப்பல் இந்திய கப்பல் கழகத்திற்குச் (Shipping Corporation of India) சொந்தமானதாகும்.
தொடர் பதவி விலகல்கள்...! ஊழலற்ற ஆட்சி முழக்கத்திற்கு விழுந்த முதல் அடி - சிதைந்த அரசாங்கத்தின் பிம்பம்
கச்சா எண்ணெய் எண்ணெய்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகை தந்த இக்கப்பல், 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த கச்சா எண்ணெய் கையிருப்பு சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ள மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் நேற்று முன்தினம் இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |