மீண்டும் அரசியலில் களமிறக்கப்படும் கோட்டாபய -காய் நகர்த்தும் மகிந்த
பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சவின் எதிர்காலம்
பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சவின் எதிர்காலம் குறித்து நிறைய யோசித்ததன் பின்னர் முன்னாள் அதிபர் கோட்டாபய மீளவும் அரசியலில் களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் நகர அபிவிருத்தி அமைச்சராக கோட்டாபயவை நியமிக்குமாநு மகிந்த ராஜபக்ச கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபயவின் அனுபவம்
நகர அபிவிருத்தி விடயத்தில் கோட்டாபயவின் அனுபவமே இந்தப் புதிய அணுகுமுறைக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அதிபராக பதவி வகித்த நிலையில் அமைச்சராக பதவியேற்பது பொருத்தமற்றது என சிலர் கோட்டாபயவிடம் சுட்டிக்காட்டிய போதிலும், கோட்டாபய மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில் தவறில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.