பொதுமக்களின் போராட்டத்திற்கு அரச உத்தியோகஸ்த்தர்களும் உதவ வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை

Parliament of Sri Lanka Trincomalee Government Employee Sri Lankan Peoples
By Kiruththikan Apr 25, 2022 06:08 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இலங்கை
Report

பொருட்களின் கண்மூடித்தனமான விலையேற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றைக் கண்டித்து பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு சகல அரச உத்தியோகத்தர்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமாகியுள்ளது. கேட்பார் பார்ப்பற்ற நிலையில் பொருட்களின் விலை நாளாந்தம் உயர்த்தப் படுகின்றது.

இதனால் மிகப் பெரும்பான்மையான மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது எதிர்ப்புகளை இந்த அரசுக்கு நாளாந்தம் நாடு முழுவதும் ஜனநாயக ரீதியில் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பொருளாதார சீரழிவினால் அரச உத்தியோகஸ்த்தர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தினமும் விலை உயர்கின்ற அளவுக்கு அவர்களது சம்பளம் உயரவில்லை. இதனால் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் கடனுடனும், அரை வயிற்றுடனும் தற்போது தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர்.

கௌரவம் கருதி அரச உத்தியோகஸ்த்தர்களால் இதனை வெளியில் சொல்ல முடிவதில்லை. இந்த விடயம் சொகுசு வாழ்க்கை வாழும் அரச தலைவருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும், பதவி ஆசை கொண்டு அமைச்சுக்களை பொறுப்பெடுத்துள்ளோருக்கும் தெரியா விட்டாலும் எனக்குத் தெரியும் ஏனெனில் நானும் மக்களோடு மக்களாகவே இருக்கின்றேன்.

எனவே, பாதிக்கப்பட்டோர் என்ற வகையில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு சகல அரச உத்தியோகஸ்த்தர்களும் ஜனநாயக ரீதியில் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும். இது குறித்து தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆசிரிய தொழிற்சங்கங்கள் இந்த விடயம் குறித்து தீர்மானித்து பொதுமக்களின் போராட்டங்களுக்கு தமது ஒத்துழைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர்.

இதனை நான் வரவேற்கின்றேன். இதே போல ஏனைய சகல அரச உத்தியோகஸ்த்தர்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025