உள்ளே ஹக்கேர்ஸ்! வெளியே U.S சீல்கள்! இலங்கை அந்தரப்பாடுகள்!
இந்தியாவும் சீனாவும் கர்ப்பிணிப்பெண்களை பேறுகாலத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கேயே பிள்ளையை பெறவைத்து அவர்களுக்கு பிறப்பினால் வரும் அமெரிக்க குடியுரிமையை பெறவைக்கும் நகரகுழி(Hellhole) நாடுகள் என அமெரிக்க அரசதலைவர் ட்ரம்ப் இழிவாக விமர்சித்து இந்தியர்களின் சீற்றத்தை புதிதாக கொட்டிக்கொண்டுள்ளார்.
இதே சமகாலத்தில் இந்தியா மற்றும் இலங்கைக்கு அருகில் அமெரிக்க கடற்படையின் ஏழாவது பிரிவு தனது தற்காலிக கடல்தளங்களில் இருந்து ஈரானுடன் தொடர்புடைய கலங்களை குறிவைத்து மடக்கிவருகின்றது.
அந்தவகையில் இலங்கைக்கு அருகே கடந்த 21 ஆந் திகதி ரிபனி என்ற பாரிய எண்ணைதாங்கி கப்பல் கைப்பற்றபட்ட நிலையில் அந்த இடத்திற்கு அருகில் இப்போது மெஜஸ்ரிக் எக்ஸ் என்ற இன்னொரு எண்ணெய்தாங்கி கப்பலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில்; இவ்வாறன கமுக்கங்கள் இடம்பெற கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை சிறிலங்காவின் திசைசேரி கணக்கில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹக்கிங் எனப்படும் இணைய ஊடுருவல் மோசடியாக படிப்படியாக எடுக்கபட்ட விடயம் அனுர அரசாங்கத்தை புதிதாக அதிர்சிகரமாக உலுக்கியுள்ளது.
இதுவரை இந்தப் பணம் எங்கே சென்றது, இந்த மோசடிக்கு யார் பொறுப்பு என்ற வினாக்களுக்கு அரச தலைவர் அனுரவின் கைகளில் உள்ள நிதி அமைச்சகத்தில் துல்லியமான பதில்கள் இல்லை.
இந்த மெகா டொலர் சுருட்டல் தெற்கில் அதிர தமிழரசில் அதன் முக்கிய முகமான சுமந்திரனை மையப்படுத்திய சில உருட்டல்கள் வட்டுக்கோட்டை கிளை கூட்டத்தில் வந்த நிலையில் இந்தவிடயங்கள் அனைத்தையும் தாங்கிவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |