யாழில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்: குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இதன்காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இழுவை மடி
இதனை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.
வடமராட்சி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்