கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பதற்றம் (படங்கள்)
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில், அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.
இது போன்ற சம்பவம் ஒன்று கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினத்தில் இருந்து குறித்த எரிபொருள் நிலையத்தின் முன், மக்கள் வீதிகளில் உறங்கி மக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


