கைதுகளால் அதிரும் கிழக்கு மாகாணம் : இனியபாரதியின் சாரதியும் சிக்கினார்
கருணா பிள்ளையான்(karuna pillayan) அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று(07) குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய கனகர் வீதி தம்பிலுவில் 01 பகுதியை சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவரே கைதானவர் ஆவார்.
இனிய பாரதியின் சாரதி
இவர் கடந்த 2007 2008 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் தற்போது அவர் பொத்துவில்-மட்டக்களப்பு வழித்தட பேருந்து சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார்.
குற்றப்பலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது
இந்நிலையில் இன்று பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது கல்முனை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் அம்பாறைக்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
