பிரதமர் பதவி விலகியவுடன் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் - உறுதியளித்தார் கோட்டாபய
பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் கடிதம் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
கடிதத்தில் மேலும் குறிப்பிட்டதாவது,
பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை தொடர்ந்து சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.
அதனடிப்படையில் சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் ஆராய நாளை அரச தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
