ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு
எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம், மாளிகாவத்தை பி.டி.சிறிசேன மைதானத்தில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால், ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மே தின கூட்டத்துக்கு அழைப்பு
குறித்த கடிதத்தில், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுரையின் பேரில், இந்த மே தின கூட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைக்க முடிவு செய்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 4 மணி நேரம் முன்