இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலி: சர்வதேசத்தை உலுக்கிய ஈரானின் அதிரடி எச்சரிக்கை
இஸ்ரேலின் (Israel) தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் (Iran) அச்சுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய எண்ணெயில் கிட்டத்தட்ட 20 சதவீதமும் மற்றும் உலகளாவிய எல்என்ஜியில் 30 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கின்றது.
இதுவரை, இரு நாடுகளிலிருந்தும் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்கள் வெளிவந்துள்ள நிலையில் நிதி உள்கட்டமைப்பும் மீது கவனம் செலுத்தியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
எண்ணெயின் விலை
இப்போது, ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை கணிசமாக சீர்குலைக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
மத்திய கிழக்கில் சமீபத்திய போர் தொடங்கிய ஜூன் 13 முதல், பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு சுமார் 70 டொலரில் இருந்து இலிருந்து ஒரு பீப்பாய்க்கு 77 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் அச்சுறுத்தல்
மேலும், ஈரானுக்கு எதிரான தனது நட்பு நாடான இஸ்ரேலை ஆதரிக்க அமெரிக்கா போரில் நுழையக்கூடும் என்பதால், மோதல் தீவிரமடைவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய வர்த்தக வழிகளை மூடுவதாக ஈரானின் அதிர்ச்சியூட்டும் அச்சுறுத்தல் சந்தைகளை உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
