தொடரும் பதற்றம் : இஸ்ரேலுக்குள் புகுந்த ஈரானின் இரும்பு பறவைகள்
கடந்த ஒரு மணி நேரத்தில் ஈரானின் (Iran) ஏழு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.
ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் 'ஒபரேஷன் ரைசிங் லையன்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது.
பாலிஸ்டிக் ஏவுகணை
அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.
ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர், 'ஆபரேஷன் ரைசிங் லையன்'. ஆனால் இப்போது ஈரான் திருப்பி தாக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு ஈரான் வைத்திருக்கும் பெயர் ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3.
இந்த நிலையில், 'ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3' என்ற பெயரில் ஈரான் நேற்று (14.06.2025) காலைமுதல் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்திருந்தது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை
இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்தில் ஏழு ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது IDF தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மணி நேரத்தில் ஏழு ட்ரோன்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் விமானப்படை மற்றும் இஸ்ரேலிய கடற்படையால் இந்த ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்க்ப்பட்டுள்ளது. மேலும் IDF இந்த ட்ரோன்கள் அழித்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
