ஈபிடிபி கொடியைப் பிரதிபலிக்கிறதா தமிழரசு கட்சி! மாங்குளத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டம் - வெடித்த சர்ச்சை
இலங்கைத் தமிழரசு கட்சியின் மே தினக் கூட்டம் மாங்குளத்தில் முதலாம் திகதி பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் ஏந்தி வந்த கொடி குறித்துச் சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.
அதாவது, ஈபிடிபி கட்சியின் கொடியினை ஒத்த வர்ணங்களே இலங்கைத் தமிழரசு கட்சியின் கொடியிலும் காணப்படுகின்றன.
ஒழுங்கில் மாற்றம்
இருப்பினும் அந்த நிறங்களின் ஒழுங்கில் மாற்றம் இருக்கிறது.

ஈபிடிபி கட்சியின் கொடியானது முதலாவதாகப் பச்சை வர்ணத்தையும் இரண்டாவதாகச் சிவப்பு வர்ணத்தையும் மற்றும் மூன்றாவதாக மஞ்சள் வர்ணத்தையும் கொண்டதாகக் காணப்படும்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசு கட்சியின் கொடியின் நிறங்களின் ஒழுங்கமைப்பானது முதலாவதாக மஞ்சள் வர்ணத்தையும், இரண்டாவதாகச் சிவப்பு வர்ணத்தையும், மூன்றாவதாகப் பச்சை வர்ணத்தையும் கொண்டதாகக் காணப்படும்.
வேறு அமைப்பு
இந்தநிலையில், திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு சரியான ஒழுங்கிலேயே வர்ணங்கள் அமைந்திருந்தன.
இருப்பினும், மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஈபிடிபியின் கட்சி கொடியின் வர்ண ஒழுங்கினை ஒத்த ஒழுங்கே காணப்பட்டது.

நாடுகளின் கொடிகளிலோ, கட்சிகளின் கொடிகளிலோ, வேறு அமைப்புகளின் கொடிகளிலோ வர்ணங்களின் ஒழுங்கமைப்பை மாற்றும் முறை காணப்படுவதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சியானது இவ்வாறு ஒழுங்கினை மாற்றிக் கட்சிக் கொடியை அமைத்தமை சரியா எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |