யாழ். பல்கலையில் உருவாகும் நினைவுதூபிக்கு தனது சம்பளத்தை வழங்கிய யாழ். மாநகர முதல்வர்
Jaffna
Money
University of Jaffna
By Vasanth
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிதாக கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு யாழ். மாநகர முதல்வர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் தனது சம்பளத்தை நேற்று (11) வழங்கியுள்ளார் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது சம்பளமான ரூ 35,462 ஐ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் கட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதன் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.