யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியில் நேற்று (25-03-2026) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் 57 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்