யாழில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி
யாழில் தவறான முடிவெடுத்துப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த வினோத் வினிதா (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19.04.2023) இடம்பெற்றுள்ளது.
தவறான முடிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் 18 ஆம் திகதி வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்த நிலையில் கணவர் தேநீரைக் குடித்துவிட்டு ரோல்ஸினைச் சாப்பிட மறுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த ரோல்ஸினைச் சாப்பிடுமாறு கணவரிடம் குறித்த பெண் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து கணவர் குறித்த பெண்ணை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
மரண விசாரணை
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்த நிலையில் கணவன் வந்ததும் தனக்குத் தானே தீமூட்டியுள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19-04-2023) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |