வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி
கிளிநொச்சியிலிருந்து(Kilinochchi) யாழ். நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பார ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி, பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் நேற்று(14) நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பளை, வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,“யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்