யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி - முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை
கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு காணியை பிரதேச சபைக்கு நன்கொடையளிக்க நாம் ஆர்வமாகவுள்ளோம் என இலங்கையின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சேர் கந்தையா வைத்தியநாதனின் பேத்தி கௌரி பென்னையா தெரிவித்துள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற தவிசாளரின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தனது ஆர்வத்தினைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரகத்தினை அரசாங்கம் அமைப்பதற்கு முயற்சிப்பதாக கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்க வேண்டியுள்ளதாக கேள்வியுற்றேன்.
இயற்கையை அழிக்காது
அவ்வாறாக இயற்கையை அழிக்காது பொருத்தமான காணி ஒன்றை நாம் வழங்குவதன் ஊடாக உள்ளக விளையாட்டரங்கை சகலரும் பயன்பெறத்தக்க வகையில் மாற்றுவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க முடியும்.

எமது பரம்பரைக்கு உரிய கோப்பாயில் உள்ள நிலங்களில் ஒன்றை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு வழங்குவதன் ஊடாக அபிவிருத்திக்கு ஒத்துழைக்க நாம் முயற்சிக்கின்றோம்.
அதற்காக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சந்தித்து இணக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளோம்.
கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு
இளைஞர்கள் பெருமளவில் வாழக்கூடிய கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கினை அமைக்க அரசாங்கம் முன்வருமாயின் எமது காணிகளில் ஒன்றை பரிசீலிக்க முடியும்.

அதற்காக பிரதேச சபை உடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முடியும். நாம் காணியை வழங்க விருப்புக் கொள்கின்றோம்.
இன்றைய நிலையில், இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறைக்கான உட்கட்டுமாணங்கள் அவசியமாகவுள்ளன.
அது போதையற்ற தேசத்தினைக் கட்டியெழுப்பவும் ஆரோக்கியமான மனித சமூகத்தினை உருவாக்கவும் அவசியமாகும் எமது குடும்பம் கருதுகின்றது என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்