எதிர்மறையான சமிக்ஞையை வழங்கும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : ஜூலி சங் விமர்சனம்
பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இணையவழிக் குற்றங்கள்
“சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இணையவழிக் குற்றங்களை ஒடுக்குவதற்கு பதில் ஜனநாயகத்தை ஒடுக்குகின்றது என தெரிவித்துள்ளதால் பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை முன்னேற்றகரமானதாக ஆக்குவதற்கு இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும்.
சிறிலங்கா அரசாஙகம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது அதேவேளை இந்த சீர்திருத்தங்கள் குறித்து மக்களிற்கு தெளிவாக எடுத்துக்கூறுவதும் அவசியம்.
மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம்
இதனால் சட்டமூலங்கள் தாமதமாகலாம் ஆனால் அதன் காரணமாக சிறந்த சட்டமூலங்களும் சீர்திருத்தங்களும் உருவாகும்.
மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையத்தின் கருத்துக்கணிப்பின்படி இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது குறித்து 70 வீதமான மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது“ எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
