வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பு! அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜேவிபி
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியை கைது செய்தமைக்கும் மக்கள் விடுதலை முன்னிணி (ஜேவிபி) கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஜேவிபி இன்று(04) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவின் எதிர்காலம்
அதில், வெனிசுலாவின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசை ஆக்கிரமித்து அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திய இந்தச் செயலை கட்சி கடுமையாகக் கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, உலகின் எந்தவொரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசைப் போலவே, வெனிசுலாவும் அதன் எதிர்காலத்தையும் அதை யார் ஆள வேண்டும் என்பதையும் தீர்மானிக்க இறையாண்மை கொண்ட உரிமையைக் கொண்டுள்ளதகவும், அதை மீற எந்த சக்திக்கும் உரிமை இல்லை என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நவீன சமூகமும் அரசு நிர்வாகமும் மிகவும் நாகரிகமாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இராணுவப் படையெடுப்பு
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசுகளின் சுதந்திரம் மற்றும் சுதந்திரம் ஆகியவை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறுவதும், நாடுகளின் மீது இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகளை நடத்துவதும் நவீன நாகரிக உலகில் நியாயப்படுத்தப்படவில்லை.

அத்தகைய சூழ்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட வலுக்கட்டாய இராணுவத் தலையீட்டை உலகில் யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எனவே, மக்கள் விடுதலை முன்னணியான நாங்கள், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட இந்த இராணுவப் படையெடுப்பைக் கண்டித்து, வெனிசுலாவின் இறையாண்மை இருப்பு மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |