யாழில் இராணுவ தேவைக்கே காணி சுவீகரிப்பு:உறுதிப்படுத்தியது பிரதேச செயலகம் !
Sri Lanka Army
Tamils
Jaffna
By Kajinthan
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாளை (09/07/2026) சுவீகரிக்கப்படவுள்ள தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கருக்கு மேற்பட்ட காணி மருதங்கேணி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்காகவே சுவீகரிக்கப்படவுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுவீகரிக்கப் படவுள்ள காணி அவசிய தேவை கருதி என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தியது பிரதேச செயலகம்
இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போதே அக்காணி இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாளையதினம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் மக்களை அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |