36 மணித்தியாலங்களில் உருவாகப்போகும் தாழ் அமுக்கப் பிரதேசம்! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற தளம்பல் நிலையானது அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
100 mm பலத்த மழை
அத்தோடு, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென், ஊவா மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |