தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி
மன்னாரில் (Mannar) இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22.03.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்துச் சம்பவம்
இதன்போது, விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதையடுத்து, காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


விடுதலைப் புலிகளை நேசித்த ஈழ அன்னையர்களின் குறியீடுதான் அன்னை பூபதி 19 மணி நேரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்