மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் நினைவேந்தல் நூல் வெளியீட்டு விழா
கிழக்கின் மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எல்.எம். சலீமின் நினைவாக, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள விசேட நினைவஞ்சலி, நினைவுப்பேருரை மற்றும் நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பு- வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் எதிர்வரும் (16.05.2026) பிற்பகல் 4.45 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, மர்ஹூம் சலீம் அவர்களின் நினைவாகத் தொகுக்கப்பட்ட நூல் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.
நிகழ்வின் சிறப்பங்கள்
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், ‘கிழக்கிலிருந்து வெளிவர வேண்டிய செய்திப்பத்திரிகைகள் - காலத்தின் தேவை’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றவுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில், பொதுமக்களைக் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கொழும்பு
தொடர்புகளுக்கு
எஸ். ஸ்ரீகஜன் ( தலைவர் ) 077 394 6702
கே.ஜெயந்திரன் ( செயலாளர் ) 077 644 9885
இரா.துரைரத்தினம் ( ஏற்பாட்டாளர் ) 076 589 8493
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |