சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) சுவிட்சர்லாந்து (Switzerland) தூதரகம் அழைப்பொன்றை விடுத்துள்ளது.
இலங்கை சுவிட்சர்லாந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, 2025 இல் இலங்கை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
சுவிட்சர்லாந்து தூதரகம்
இதனடிப்படையில், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
தூதரகம் விடுத்த அழைப்பில் இலங்கை புதிய அரசியலமைப்பு மாற்றம் நிகழவுள்ள நிலையில், இலங்கை அரசியல்வாதிகள் சுவிஸ் அரசியல் அமைப்பு பற்றிய ஆழமான, நேரடி நுண்ணறிவுகளைப் பெறவும் மற்றும் அர்த்தமுள்ள பரிமாற்றங்களில் ஈடுபடவும் ஒரு வாய்ப்பை இந்த மாநாடு வழங்கும் என தூதரக அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 13 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், குறித்த மாநாட்டில் ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
