புர்கா தடை அறிவிப்பில் பின்வாங்கலுக்கு காரணம் என்ன? எம்.பி கொடுத்த விளக்கம்
sarath
samagi jana balawegaya
mujip rahman
By Vasanth
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர புர்கா தடை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர புர்கா தடை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ருவிட்டர் பதிவொன்றை பதிவிட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது அரசாங்கமே என்பது தெளிவாகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,