சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த நினைக்கும்போது அதனை எதிர்த்து செயற்படுத்துகின்றவர்களுக்கு அரசு துணை போகக் கூடாது என முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று (9) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தடைசெய்யப்பட்ட விடயங்கள்
கடற்றொழிலில் தடைசெய்யப்பட்ட விடயங்கள் தடைசெய்யப்பட்டதாகவே காணப்பட வேண்டும்.

தடைசெய்யப்பட்ட முறைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கக்கூடாது.
குறிப்பாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படலாம்.
லைட் பாச்சுதல் மற்றும் டைனமேட் அடித்தல் மிகவும் தவறான தொழில். சிலர் அவ்வாறு செய்வதால் தமது சிறுதொழில் வாழ்வாதாம் பாதிப்படைகிறது.
தமக்கும் ஏனைய சமூகத்திற்கும் முரண்பாடுகள் வருகிறது. தடைசெய்யப்பட்ட முறைகளுக்கு எச்சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கக்கூடாது.
சட்டத்தை போடும் அரசாங்கம் அதனை கருத்தில்கொண்டு கடல் தொழிலில் உழவு இயந்திர பாவனை மற்றும் சுருக்குவலை டைனமற் உட்பட சட்டவிரோத தொழில் முறைகளை முற்றாக நிறுத்தி தருமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
