இனப்படுகொலையின் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்கால்: இலங்கை திருச்சபையின் குருமுதல்வர் விசனம்

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Government Of Sri Lanka
By Sathangani May 18, 2024 07:09 AM GMT
Report

''முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்று தனியாக சொல்லிவிட முடியாது இனப்படுகொலையின் உச்சக்கட்டம்தான்'' அது என இலங்கை திருச்சபையின் குருமுதல்வர் அருட்பணி எஸ்.டி.பி செல்வன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ” இலங்கையில் இதற்கு முன்பிருந்தே 1956, 1958, 1977, 1983 ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனை இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. கொல்லப்பட்டார்கள், அழிக்கப்பட்டார்கள் என்றே சொல்லலாம்.

திட்டமிட்ட ரீதியிலே அவர்களுடைய வாழ்விடங்கள் அழிக்கப்பட்டன, உறவுகள் அழிக்கப்பட்டார்கள். இந்தப் பின்னணியிலே தான் முள்ளிவாய்க்காலின் உச்சக்கட்டத்தைப் பார்க்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் எற்றுக்கொள்கின்றதோ இல்லையோ முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான். அதுமட்டுமல்ல இதனை உலக அடிப்படையிலும் சில நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன சில நாடுகள் ஏற்றுக்கொள்ளவதில்லை அது அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்.

ஆகவே எங்களுடைய நிகழ்ச்சி நிரல் என்னவென்றால் எங்களுடைய மக்கள் இயல்பாக சுதந்திரத்தோடு வாழ வேண்டும். 

அன்று முள்ளிவாய்க்கால், இன்று காசா. யாருக்கு யாரிலே விருப்பம். ஒருவருக்கும் ஒருவரிலும் விருபபம் இல்லை. அமெரிக்கா எங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையிலே கதைக்கின்றது என்றால் எங்களுடைய விருப்பத்தில் அல்ல. இதைப் பாவித்து என்ன அடையப்போகின்றது என்பது அங்கிருக்கின்ற அடிப்படை.

வடக்கு கிழக்கில் ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றுகின்ற உச்சக்கட்டத்திலே எந்தெந்த நாடுகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனவோ அந்த நாடுகளை எல்லாம் ஒன்றாக்கி அவை எல்லாம் இங்கே ஒரு இன அழிப்பை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு உதவி செய்தன.“ என தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கிளிநொச்சியில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கிளிநொச்சியில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள்


மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


 

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015