வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Lasantha Wickramasekara
By Kanooshiya
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (26.10.2025) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Cid) கெகிராவ பிரதேசத்தில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட தேடுதல் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (25.10.2025) தென் மாகாணம் முழுவதும் காவல்துறையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்