வங்கதேச அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் அமைச்சர் நளிந்த
வங்கதேசத்தின் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸ கலந்து கொள்ள உள்ளார்.
வங்கதேசத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடி இதை வங்கதேச ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய அரசின் பதவியேற்பு விழா
வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவும், புதிய அரசின் பதவியேற்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (17) டாக்காவில் நடைபெற உள்ளது.

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இந்தியக் குழு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
போராட்டங்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் நடந்த முதல் தேர்தல்
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில், வங்கதேச தேசியவாதக் கூட்டணி 300 நாடாளுமன்ற இடங்களில் 212 இடங்களை வென்றது. அதன்படி, கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் மகன், தாரிக் ரஹ்மான், நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு நடந்த தொடர் பாரிய போராட்டங்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கங்கள், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு பொதுமக்களின் ஒப்புதலைப் பெறுவதும் ஆகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 5 மணி நேரம் முன்