உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி
பேச்சுவார்த்தை மூலமாக உக்ரைன் (Ukraine) - ரஷ்யா (Russia) போரை நிறுத்த முடியும் என இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு தான் வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது.
போருக்கான நேரம்
ரஷ்ய ஜனாதிபதியிடம், இது போருக்கான நேரம் கிடையாது என்று என்னால் பேச முடியும்.
அதேபோல, உக்ரைன் ஜனாிதிபதியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது என்று எடுத்துக்கூற முடியும்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.
அமைதியின் பக்கம்
பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை ஆனால் அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது.
இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது, இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும், நான் நடுநிலையானவன் கிடையாது அத்தோடு நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்